இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸ்சில் அஸ்வின் சுழலில் இங்கிலாந்து அணி சுருண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.இதில் இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா 161 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடினார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி ,சுப்மான் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர் .துணை கேப்டனான ரஹானே 67 ரன்கள் எடுத்தார். […]
