Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா பீதி: டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை தங்க வைக்க எதிர்ப்பு

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கு பெற்றவர்களை சென்னை தண்டையார்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் தங்க வைப்பதாக தகவல் வெளியானது இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் சிலர் கொரோனா தாக்கி இறந்துள்ள நிலையில் பலரை வைரஸ் தாக்கியுள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த சிலர் சொந்த ஊருக்கு திரும்பினர் அவர்களில் சிலரை தண்டையார்பேட்டை சமூகக் கூடத்தில் தங்க வைக்க மாநகராட்சி ஏற்பாடு செய்ததாக தகவல் வெளியானது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் இதுவரை 190 பேருக்கு கொரோனா தொற்று… அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று வரை 124 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி மாநாட்டில் 8,400 பேர் பங்கேற்பு – அதிர்ச்சி தகவல் …!!

டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமுல்படடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் மக்கள் வெளியே வராமல் வீட்டிற்குள் இருந்து வருகின்றன. மத்திய மாநில அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 100க்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு மருத்துவமனை அனுமதி!

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை அடையாளம் காணும் பணி தமிழகம் முழுவதும் தீவிரம் அடைந்துள்ள நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 100க்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல மாநாட்டில் பங்கேற்ற 35 பேருக்கு திருவாரூரில் பரிசோதனை […]

Categories
செங்கல்பட்டு திருவாரூர் மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 51 பேருக்கு திருவாரூர், செங்கல்பட்டு மருத்துவமனையில் சோதனை!

தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 124ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து தெரிவித்தால் உரிய சிகிச்சை – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை சென்னை, சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா…. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தகவல்!

புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பெண் வீடு திரும்பிய நிலையில் புதிதாக 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள மாஹேவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டது. அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வந்த இவருக்கு மாஹே அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் முழுமையாக குணமடைந்து வீடு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BIG BREAKING: கொரோனா பாதிப்பு 616 பேர் எங்கே ? தமிழகத்தில் பகீர் தகவல் …!!

தமிழகத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஏற்கனவே 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் குணமடைந்துள்ளனர். இன்று காலை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்த எண்ணிக்கை 74ஆக உயர்ந்த நிலையில் மேலும் 50பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று தமிழக சுதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இது […]

Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி அரசு மருத்துவமனையில் மேலும் 25 பேர் அனுமதி …!!

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலம் நாடு முழுவதும் கொரோனா பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்தியாவில் வேகமாக பரவி வரும்  கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருக்கும் நிலையில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி […]

Categories

Tech |