தற்போது டெல்டா வகை கொரோனா தொற்று நியூசிலாந்தில் பரவி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் 58 வயதுடைய ஒருவருக்கு ஆக்லாந்து பகுதியில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோரமண்டல் மற்றும் ஆக்லாந்து முழுவதும் மூன்று நாட்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் பொது மக்களுக்கு மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் […]
