மதுரையில் டீக்கடை வியாபாரி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கே.புதூர் சூர்யா நகரிலுள்ள ஜெய் கார்டன் பகுதியில் அய்யம்பெருமாள் என்பவர் தனது மகன் முருகனுடன்(50) வசித்து வருகிறார். முருகன் அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் டீக்கடை மற்றும் எண்ணெய் கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து கடைக்கு புறப்பட்டுச் சென்று விடுவார். டீ கடையை திறந்து வைத்துவிட்டு, கடைக்கு தேவையான பால் […]
