கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி அளித்த புகாரின்படி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் செல்வராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பத்தூர் பகுதியில் தனியார் கல்லூரி எதிரில் டீக்கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இவருக்கு அகிலா என்ற மனைவியும், தருணிஸ் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்கள் கல்லாத்தூர் பகுதியில் புதிதாக கட்டியிருக்கும் வீட்டில் தினசரி இரவில் அங்கு தங்கி வருகின்றனர். இந்நிலையில் செல்வராஜி தனது மோட்டார் சைக்கிளில் […]
