உசிலம்பட்டியில் 68 சமுதாய மக்களுக்கு டி என் டி சான்றிதழ் வழங்கக்கோரி இரு சங்கத்தினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தேவர் சிலை முன்பாக வடமாநில தமிழர்கள் கூட்டமைப்பும் சீர்மரபினர் சங்கமும் இணைந்து கருப்புக்கொடி ஏந்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர்களும் காவல்துறையினரிடம் கூறியதாவது, இந்திய நாட்டிலுள்ள அனைத்து சீர்மரபினர் மற்றும் […]
