டிராக்டர் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மணியம்பட்டி பகுதியில் சோத்திரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ராஜலட்சுமியின் தாயாரான சின்னதாயின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சமுத்திரக்கனி என்பவரின் டிராக்டர் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயம் […]
