டிராக்டரில் மணல் கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் பத்மநாபமங்கலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த டிராக்டரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் டிராக்டரில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிராக்டர் டிரைவரான பேட்மா நகர் பகுதியில் வசிக்கும் பலவேசம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்த […]
