மணல் கடத்தியதால் டிரைவரை கைது செய்ததோடு, காவல்துறையினர் டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முள்ளம் குறிச்சி பகுதியில் கரம்பக்குடி போலீஸ் சப் – இன்ஸ்பெக்டரான பிரபாகரன் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த டிராக்டரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த டிராக்டர் வண்டியில் மணல் கடத்தி சென்றது சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து டிராக்டர் டிரைவரான முருகன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை […]
