நாடு முழுவதும் ரயில் டிக்கெட் பரிசோதனையை எளிமையாக்கி நவீனப்படுத்தும் விதமாக கையடக்க கணினி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.வழக்கமாக முன்பதிவு பெட்டிகளில் பயணச்சீட்டு பரிசோதவர்கள் பயணிகளின் பயண சீட்டுகளை தங்களிடம் உள்ள அச்சிடப்பட்ட பயணிகள் பட்டியலை பார்த்து சோதனை செய்வார்கள் . ஆனால் தற்போது ரயில்களில் இந்த பயணிகள் பட்டியல் கணினிமயமாக்கப்பட்ட உள்ளது. இதற்காக மொத்தம் 857 கையடக்க கணினிகளை தெற்கு ரயில்வே ஒதுக்கியுள்ளது . அவற்றில் சென்னைக்கு 246, திருச்சிக்கு 101, மதுரைக்கு 98, திருவனந்தபுரத்திற்கு […]
