அரசுத் துறைகளில் குரூப் 2, குரூப் 2-ஏ பணிகளில் 5,529பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையமமான டிஎன்பிஎஸ்சி சார்பாக வருகின்ற 21 ஆம் தேதி முதல் நிலை தகுதி தேர்வு நடைபெறுகிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கியுள்ள பிரத்தியேக விடைத்தாள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விடைத்தாள் பெற்றதும் அதில் உள்ள தங்களின் விவரங்களை சரிபார்த்த பிறகு பயன்படுத்த வேண்டும். தவறாக இருந்தால் பயன்படுத்துவதற்கு முன்பு அதனை மாற்றிக்கொள்ள வேண்டும். தேர்வர்கள் அவர்களின் […]
