கோவை தெற்கு மாவட்டத்தில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, “மக்கள் அனைவரும் தேமுதிகவிற்கு வாக்களிக்க வேண்டும். பணபலம் அதிகார பலம் படைத்தவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் கேப்டன் 40 ஆண்டுகாலமாக மக்களுக்காக உழைத்தவர். கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தற்போதைய அமைச்சர் என அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு வேட்பாளர்களுக்கு பணம் கொடுப்பதில் தான் மும்முரம் காட்டுகின்றனர். ஏதாவது நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அவர்கள் […]
