பிரேசில் நாட்டில், கடந்த 2018-ஆம் ஆண்டு அழகி பட்டம் வென்றவர் அழகி கிளெய்சி கொரிய்யா (வயது 27). இவர் தென்கிழக்கு நகரமான மெகேயில் ஒப்பனை நிரந்தர ஒப்பனை நிபுணராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, டான்சில் பிரச்சனையின் காரணமாக, அறுவை சிகிச்சை ஒன்றை செய்துள்ளார். எனவே இந்த டான்சில் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, அவருக்கு தொடர்ந்து உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
