ஆம்பூர் அருகே கார் மோதிய விபத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாலக்காடு அருகில் தண்டுக்காரஹல்லி கிராமத்தில் வசித்து வந்தவர் 46 வயதான சுரேஷ்குமார். இவர் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேலூரில் இருந்து தர்மபுரி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த போது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் செல்லும்போது சென்னை சேத்துப்பட்டு […]
