அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை எதிர்த்தும், பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு, பென்சன் திட்டம் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய 2 தினங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் […]
