தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் விடுதலைப்புலிகள் ஆட்சியில் இருந்தபோது யாரும் போதைப் பொருளுக்கு அடிமையாகவில்லை என்று இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். நேற்று 2022-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் குறித்த விவாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. அதில் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் போர் காலங்களில் உயிரிழந்த மாவீரர்களை மக்கள் நினைவு கூர்ந்து விடுவார்கள் என்பதற்காக தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் காவல்துறையினர் ஒவ்வொரு இல்லங்கள் முன்பாகவும் குவிக்கப்பட்டுள்ளனர் […]
