பெங்களூரு பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரை அவமதித்த நீதிபதிக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . நீதிபதிக்கு எதிராக போராட்டம் கடந்த மாதம் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவிற்கு ராய்ச்சூர் மாவட்ட கோர்ட்டில் தேசியக்கொடி ஏற்றுவதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதி மல்லிகார்ஜுன கவுடா அங்குள்ள அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்றினால் தான் தேசியக் கொடியை ஏற்றுவதாக கூறினார்.அதன்படி அவரின் உருவப்படம் அகற்றப்பட்டது. இந்நிலையில் கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் வக்கீல்கள், சங்கங்கள் […]
