ஜெர்மன் நாட்டில், பகல் நேரத்தில் முன்னாள் செச்சென் போராளியை ரஷ்ய உளவாளிகள் கொலை செய்த சம்பவம் உறுதியாகியிருக்கிறது. ரஷ்ய நாட்டை எதிர்த்து, செச்சென் போராளிகளுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டதாக Tornike Khangoshvili என்ற நபரை ஜெர்மன் நாட்டில் இருக்கும் பெர்லின் நகரத்தின் ஒரு பூங்காவில் வைத்து கடந்த 2019 ஆம் வருடத்தில் ரஷ்ய உளவாளிகள் கொலை செய்திருக்கிறார்கள். இது குறித்து விசாரணை மேற்கொண்ட பெர்லின் நீதிமன்றம் ரஷ்ய உளவாளிகள் தான் கொலை செய்திருக்கிறார்கள் என்று உறுதி செய்திருக்கிறது. […]
