மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, ஏறக்குறைய 90 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதையடுத்து மூன்றரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், 78 கேள்விகள் ஓ.பி.எஸ்யிடம் கேட்கப்பட்டுள்ளன. இதை அடுத்து அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் பின்வருமாறு, […]
