இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் உணவு, எரி பொருட்கள் என அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா இலங்கைக்கு 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசல் ஆகியவற்றை வழங்கி உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை ஐந்து முறை இதுபோல் எரிபொருள் இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது […]
