குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று (6ஆம் தேதி) நடைபெறுகிறது. குடியரசு துணைத் தலைவருக்கான பதவிக்காலம் இம்மாதம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 18ஆம் தேதி பிரதமர் மோடியின் முன்னிலையில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரான ஜெகதீப் தங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல எதிர்க்கட்சியின் சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ராஜஸ்தான் […]
