இந்தோனேஷியாவில் உள்ள மாலுக்கு மாகாணத்தில் இன்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் மாலுக்கு மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் இன்று அதிகாலை 4:25 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 131 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்ததாகவும், இந்நிலநடுக்கத்தால் சுனாமி போன்ற பேராபத்து ஏற்படும் அபாயம் […]
