கொரோனா இரண்டாம் அலையில் பெற்றோரை இழந்த 100 குழந்தைகளை தத்து எடுக்கும் பணியை டேராடூனை சேர்ந்த ஜாய் அறக்கட்டளை சேர்ந்த ஜெய் ஷர்மா என்பவர் செய்து வருகிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் பல உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது. பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். அந்த குழந்தைகளுக்கு அரசு தங்களால் இயன்ற உதவிகளை செய்யும் என்று தெரிவித்துள்ளது. இந்த சூழலில் உத்தரகாண்ட் சேர்ந்த ஜெய் ஷர்மா என்பவரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. […]
