உணவின்றி தவித்தவர்களுக்கு பிரபல நடிகை உதவி செய்துள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. பலபேர் பொருளாதார ரீதியாகவும் சிரமத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது அறக்கட்டளையின் மூலம் உதவி செய்து வருகிறார். […]
