உக்ரேனின் கீவ் நகரில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய பின்னரும் கீவ் நகரில் சாலைகளில் ரஷ்ய கண்ணி வெடிகளை புதைத்து விட்டுச் சென்றுள்ளன. இதனால் கீவ் நகரம் பாதுகாப்பானதாக இல்லை என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அப்பாவி மக்களை கொன்று புதைத்து கீவ் நகரம் சுடுகாடு போல் காட்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கீவ் நகரத்திலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறிய பின்னரும் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் தங்களுடைய பலத்தை அதிகரித்து வருவதாக ஆதாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. […]
