இந்தியா முழுவதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகள் இருக்கிறது. இதில் தமிழகத்தில் 54 இடங்களில் இருக்கிறது. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்க கட்டணம் வசூலிக்கும் போது வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதால் பாஸ்டேக் முறை அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது ஸ்கேன் செய்யப்பட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பாஸ்டேக் முறையினால் வாகனங்கள் நீண்ட […]
