எல்லைப் பகுதிகளில் இருக்கும் சோதனைச் சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு மற்றும் கேரள எல்லைகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வைத்திரி, முத்தங்கா, சுல்தான், பத்தேரி, வயநாடு போன்ற பகுதிகளில் உள்ள கிராம மக்களை மிரட்டி அரிசி, பருப்பு போன்ற பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இவர்கள் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது, துண்டு பிரசுரங்கள் ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாவோயிஸ்டுகள் தமிழக-கேரள […]
