மின்சாரம் பாய்ந்து மின்பாதை ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள நாடுகாணி பொன்னூர் பகுதியில் வசித்து வந்த ஆனந்தராஜ் என்பவர் உப்பட்டி துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டதால் அவர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஆனந்தராஜ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மின் ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு பந்தலூர் […]
