ஆடு மேய்க்கச் சென்ற சிறுவன் மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சொரக்காயல்நத்தம் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் கூலி தொழிலாளியாக வசித்து வருகின்றார். இவருக்கு 16 வயதுள்ள பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவரது குடும்பத்தினர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். எனவே தற்போது பள்ளிகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் பிரசாந்த் ஆடு மேய்க்க சென்று வந்துள்ளான். இதனால் பிரசாந்த் தினசரி காலையில் காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துவிட்டு மீண்டும் […]
