சொத்து தகராறு காரணமாக கூலி தொழிலாளியை அடித்து கொலை செய்த உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்குச்சிப்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகிராமன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவசக்தி, ஜெயசக்தி என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். அதே பகுதியில் ஜானகிராமனின் உறவினரான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வரதராஜன் என்ற […]
