சேலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தைகடந்துள்ளது. சேலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக கடந்த ஒரு வார காலத்திற்குள்ளாகவே மூன்று முறை இந்த எண்ணிக்கையானது உச்சம் தொட்டு இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் 946 ஆக இருந்த மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் ஒரு பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு பெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் […]
