Categories
சேலம் மாவட்ட செய்திகள்

5 கிலோ மீட்டர் சுற்றி போறோம்…. வீட்டில் கருப்பு கொடி கட்டி…. எதிர்ப்பு தெரிவித்த மக்கள்….!!

சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்த மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தெற்கு காட்டுவளவு கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், இறந்தவரை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு செல்ல என எம்.செட்டிப்பட்டி சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலையானது தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கற்கள் வைத்து அடைத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக தெற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வந்த வாலிபர்…. திடீரென எடுத்த முடிவு…. போலீஸ் விசாரணை….!!

 ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியில் ரவி மகன் ரமேஷ் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக இருந்தார். கடந்த வருடம் மே மாதம் ரமேஷ் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரும், அ.தி.மு.க. ஒன்றிய மகளிர் அணி தலைவியுமான சாந்தா என்பவரை குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ரமேஷை கைது செய்து சிறையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்த பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

மயங்கி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் பகுதியில் கோவிந்தன் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்தார். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களது பக்கத்து வீட்டில் சுப்பிரமணியசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தை அடிக்கடி சாந்தி வீட்டிற்கு சென்று விளையாடுவது வழக்கமாக இருந்தது. இதேபோன்று அந்த குழந்தை சாந்தி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிராமசபை கூட்டத்திற்கு எதிர்ப்பு…. பொதுமக்களின் சாலை மறியல்…. சேலத்தில் பரபரப்பு….!!

கிராமசபை கூட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புத்திரகவுண்டம்பாளையம் கிராம ஊராட்சி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கிராமசபை கூட்டம் தொடங்கியவுடன் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் கேட்டபோது “ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறையாக சம்பளம் மற்றும் பணி வழங்காததால் அதற்கான கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதியவர் தீக்குளிக்க முயற்சி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நங்கவள்ளி தேவேந்திர தெருவில் முதியவர் நரசிம்மராஜ் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் நரசிம்மராஜ் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் நரசிம்மராஜ் திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் நரசிம்மராஜை தடுத்து நிறுத்தி டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை […]

Categories
அரசியல்

எங்கள் கொடியை மட்டும்…. பறக்க விட அனுமதி மறுப்பது ஏன்…? தொல் திருமா…!!

சேலம் மாவட்டம் மோரூர் பகுதியில் பல்வேறு கட்சிகளின் கொடிக் கம்பங்கள் இருக்கின்ற நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கொடிக்கம்பங்கள் நட முயற்சி செய்தபோது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கூறி புதிய கொடிக்கம்பத்தை வைக்க தடை செய்தனர். இதனையடுத்து திருமாவளவன் நேரில் வந்த பிறகும்கூட  காவல் துறையினர் இதற்கு அனுமதி மறுத்தனர். இதனால் காவல்துறையினர் மற்றும் விசிகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு காவல் துறையினர் தடியடி நடத்தினார்கள். இதன் பின்னர் திருமாவளவன் முதல்வர் முக ஸ்டாலின் அண்ணா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு” கொளத்தூர் மணி உட்பட 5 பேர் ஆஜர்…. நீதிபதியின் உத்தரவு….!!

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். சேலம் மாவட்டம் காந்தி சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து திராவிட விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அருள்குமார், கிருஷ்ணன், டேவிட் உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கண்ட 5 பேரும் வழக்கு விசாரணைக்காக முதன்மை […]

Categories
அரசியல்

சேலம் மக்களே… உங்களுக்கு ஒரு குட் நியூஸ்… முதல்வர் ஸ்டாலின் கூறிய புது அப்டேட்…!!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சேலம் மாவட்டத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள  ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடத்தில் பாராசூட், ராணுவ சீருடை மற்றும் ஹெலிகாப்டர் உதிரிபாக தொழில் தொடங்குவதற்கு அமோக வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார். முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் சேலம் மாவட்டம் கருப்பூரில் சிட்கோ மகளிர் தொழில் பூங்காவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசுகையில், “சேலம் மாவட்டமானது தமிழக அளவில் தொழில் முனைவோருக்கான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளர்கள்…. வழியில் நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

லாரி-ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் புதுசாம்பள்ளி பகுதியில் கட்டிட தொழிலாளியாக கோபால் என்பவர் வசித்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவில் சங்ககிரி பகுதியிலிருந்து கட்டிட வேலைக்கு தொழிலாளர்களை அழைத்து செல்வது வழக்கமாக இருக்கின்றது. இதனையடுத்து வேலை முடிந்தவுடன் மீண்டும் கோபால் மாலை வேளையில் அவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அதே பகுதியில் இறக்கி விடுவார். அதன்படி கோபால் கோம்பூரான்காடு பகுதியைச் சேர்ந்த அழகேசன், வீரனூர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படி நின்ற மாணவர்…. வெளிவந்த பரபரப்பு தகவல்…. போலீஸ் நடவடிக்கை….!!

செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து பொருட்களை திருடிச் சென்ற மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கோட்டைக்காடு பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலம்பட்டி பகுதியில் சொந்தமாக செல்போன் கடை ஒன்று நடத்தி வருகிறார். கடந்த 20-ம் தேதி வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு மோகன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மோகன் மறுநாள் காலை மீண்டும் வந்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் மோகன் உள்ளே சென்று […]

Categories
அரசியல்

மக்களின் உணர்வுகளை புரிஞ்சிகிட்டு…. செயல்படுவதே நம் ஆட்சி…. முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிநவீன ஜவ்வரிசி ஆலையை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் ஜவ்வரிசி உற்பத்தியாளர் மற்றும் மரவள்ளி விவசாயிகளுடன்  உரையாடினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “திமுக அரசனாது ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 200 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. மேலும் தமிழக அரசு மக்களின் தேவைகளை உணர்ந்து செயலாற்றி வருகிறது. இன்றைய ஆட்சி காலத்தில் மக்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவதே முக்கியமான கொள்கையாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இதற்கு தானே ஆசைப்பட்டீங்க” குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை…. வெளிவந்த உருக்கமான தகவல்….!!

தனது 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மங்கலபட்டி பகுதியில் பெருமாள் மகன் முருகன் வசித்து வந்தார். இவர் சேலம் மாவட்டத்திலுள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தாபா உணவு விடுதியில் சமையலராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், சீனிவாசன், கிருஷ்ணபிரியா என்ற மகனும்- மகளும் இருக்கின்றனர். கடந்த 24-ஆம் தேதி கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செல்போனில் சிரித்து பேசிய இலக்கியா…. கத்தியால் குத்துப்பட்ட கணவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

செல்போனில் பேசியதை கண்டித்த கணவரை மனைவி கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பா டியை அடுத்த மசையன் தெரு காட்டூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். கிருஷ்ணகிரியில் இலக்கியா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில் திருவிழாக்களில் நடனமாடும் பெண்களுக்கு அலங்காரம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த பணிக்காக இலக்கியா எடப்பாடி பகுதிக்கு வந்தபோது பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஆனால் காதலர்கள் வேறு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? 5 பேர் தீக்குளிக்க முயற்சி…. கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகம் முன்பு 5 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள களரம்பட்டி பகுதியில் ரமேஷ்-நதியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு சரண்யா என்ற மகள் இருக்கின்றார். இதில் ரமேஷ் வெள்ளிப்பட்டறை தொழிலாளியாக இருக்கின்றார். இந்நிலையில் கணவன்-மனைவி மற்றும் மகள் சரண்யா ஆகிய 3 பேரும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் மயங்கி விழுந்த மாடுகள்…. கதறி அழுத தம்பதியினர்…. போலீஸ் விசாரணை….!!

காலாவதியான சாக்லேட்டுகளை தின்று 3 மாடுகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கோம்பூரான்காடு பகுதியில் பெரமன்-ஜெயம்மா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பெரமன் விவசாயியாக இருக்கின்றார். இந்த தம்பதியினர் 4 பசு மாடுகளை வீட்டில் வளர்த்து வந்தனர். இதனால் தினசரி மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுவது வழக்கமாக இருக்கிறது. அதன்படி மாடுகளை அவர்கள் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டதும் அது அதே பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பட்டா பெயர் மாற்றம்” லஞ்சம் கேட்ட அதிகாரி…. போலீஸ் நடவடிக்கை….!!

பட்டா பெயர் மாற்றுவதற்கு லஞ்சம் பெற்றுக்கொண்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பட்டி கிராமத்தில் சாமியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருக்கின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இதில் செல்வகுமார் தாத்தா கந்தசாமியின் பெயரில் இருக்கும் நிலத்தை தன் அப்பா சாமியப்பன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக ஏர்வாடி வாணியம்பாடி கிராமநிர்வாக அலுவலரான விஜயலட்சுமியிடம் விண்ணப்பம் செய்துள்ளார். அப்போது விஜயலட்சுமி பட்டா பெயர் மாற்றம் செய்ய 3 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கி விழுந்த மாணவி…. வெளியிட்ட உருக்கமான வீடியோ…. முதல்வரின் உதவி….!!

இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்த மாணவியின் மருத்துவ சிகிச்சைக்கு முதல்வர் முக.ஸ்டாலின் உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள அரிசிபாளையம் பகுதியில் விஜயகுமார்-ராஜ நந்தினி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் ஜனனி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் இவர் சிலம்பம், ஸ்கேட்டிங், வில்வித்தை போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு மாநில அளவில் பரிசுகளைப் பெற்றுள்ளார். கடந்த  2019-ஆம் ஆண்டு மாணவி வீட்டில் திடீரென மயங்கி விழுந்ததால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விதிகளை மீறி தனிநபர் கடன்…. கூட்டுறவு சங்க செயலாளர் அதிரடி பணி நீக்கம்….!!!!

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில் தனிநபர் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது.இதில் கூட்டுறவு சங்க உறுப்பினராக இருந்த சக்தி மற்றும் லட்சுமி ஆகியோர் வங்கி விதிமுறைகளையும் மீறி தனிநபர் கடன் வழங்கி இருப்பத்தாக தற்போது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து  செயலாளர் மணிராஜ் பெயரிலும் நகைக்கடன் வழக்கிருப்பதை உறுதிசெய்யபட்டு விசாரணைக்கு பின் அவர் பணி நீக்கம் செய்யப்படுவார் என்று வங்கியின் தலைவர் சுந்தர்ராஜன் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த போது, ஏற்கனவே கூட்டுறவு வங்கியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விடிய விடிய போன் பேசிய மனைவி…. கண்டித்த கணவன்…. ஆத்திரத்தில் மனைவி செய்த வெறிச்செயல்…..!!!!

சேலம் மாவட்டம் இடைப்பாடியில், பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விசைத்தறி தொழிலாளி. தர்மபுரி மாவட்டம் பாரிஸ் நகரில் இலக்கியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிப்பதற்காக பேருந்தில் சென்று வந்த போது பாலமுருகன் உடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் அதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு 7 மாத பெண் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பாட்டிக்கு உதவியா இங்கே இரு” சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. போக்சோவில் வாலிபர் கைது….!!!

சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த 7 மாதத்திற்கு முன்பு சேலம் மாவட்டம் தும்பிபாடியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து பாட்டிக்கு உதவியாக இருப்பதற்காக சிறுமியின் பெற்றோர் அவரை அங்கு விட்டு விட்டு திருச்செங்கோட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சரவணன் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விடிய விடிய நடந்த சோதனை…. மேலும் சிக்கிய 183 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

குற்றச் செயல்களில் ஈடுபட்ட மேலும் 183 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு பழைய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை கைது செய்யகோரி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவை பிறப்பித்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகளை கண்டறிந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா மற்றும் புறநகர் பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் ஆகியோரின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. சாலையில் பெருக்கெடுத்த நீர்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

பலத்த மழை காரணமாக பேருந்து நிலையத்தில் அதிகமாக தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையம், சங்ககிரி, ஆத்தூர், ஏற்காடு போன்ற பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் நீர் தேங்கி காணப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று அண்ணா பூங்கா, சத்திரம், செவ்வாய்ப்பேட்டை, பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்ஷன் உட்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான சிறுவர்கள்…. 1 மணி நேரத்தில் நடந்த திருப்பம்…. கமிஷனரின் பாராட்டு….!!

காணாமல் போன சிறுவர்களை 1 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினரை கமிஷனர் பாராட்டியுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள நடராஜர் நகர் பகுதியில் மணிகண்டன் மகன் நந்தன் மற்றும் நக்கீரன் மகன் முகிலன் ஆகிய 2 சிறுவர்களும் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நந்தன், முகிலன் ஆகிய இரண்டு சிறுவர்களும் காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுவர்கள் கன்னங்குறிச்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. வசமாக சிக்கிய தொழிலாளி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள கருணைநகர் பகுதியில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து தனபால் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லாரியில் இதுவா இருந்துச்சு…? சோதனையில் சிக்கிய பொருள்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

குட்கா பொருட்களை கடத்தி செல்ல முயன்ற டிரைவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவட்டிப்பட்டி அருகில் உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிலிருந்த  மூட்டைகளை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன்பின் லாரி டிரைவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அதிக பணம் வாங்கி தாரேன்” 6 கோடி ரூபாய் மோசடி…. பாதிக்கப்பட்டவர்கள் மனு….!!

பழைய நகைகளை விற்று தருவதாக மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கோடிப்பள்ளம் மற்றும் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் பல்வேறு நகைக்கடைகளில் மதிப்பீட்டாளராக வேலை பார்த்தார். இந்நிலையில் அவர் பழைய நகைகளை கொடுத்தால் அதை அதிக விலைக்கு விற்றுத் தருவதாக […]

Categories
சேலம்

“கம்மியா மார்க் எடுத்திருக்க” மாணவியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரியில் நினைத்ததை படிக்க முடியாத காரணத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரி நகரில் நஷீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமன்னா ஆசித் என்ற மகள் இருந்தார். இவர் பிளஸ்-2 படித்துவிட்டு தற்போது கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் படிக்க விரும்பினார். அதற்கு தந்தை நஷீர் அகமது நீ குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் விரும்பிய பாடத்தை படிக்க முடியாது என்று மகளிடம் தெரிவித்துள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மது குடித்த வினோத்…. கீழே விழுந்ததால் விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மதுபோதையில் நிலை தடுமாறி கீழே விழுந்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் காசக்காரனூர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வந்தார். இவர் ஜே.சி.பி. டிரைவராக இருந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வினோத் மது அருந்திவிட்டு வீட்டின் தரையில் படுத்து உறங்கியுள்ளார். இதனையடுத்து வினோத் வீட்டில் உள்ள கட்டிலில் படுப்பதற்கு முயற்சி செய்ததாக தெரிகிறது. அப்போது வினோத் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காணாமல் போன வாலிபர்…. கிணற்றில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

காணாமல் போன வாலிபர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் கோவிந்த காடு பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்தார். இதனையடுத்து வீட்டிலிருந்து வெளியேறிய விஜயகுமார் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விஜயகுமாரை பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் விஜயகுமார் கிடைக்காததால் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அதே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 2024ல் சட்டமன்றத்திற்கு தேர்தல்?.. ஈபிஎஸ் பேட்டி!!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.. சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.. அப்போது அவர், 1000 பேர் அமரும் வகையில் நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு வருவதால் எம்பிக்கள் எண்ணிக்கை உயரலாம். எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதால் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓட்டலில் இப்படி பண்றீங்க…. வசமாக சிக்கிய தொழிலதிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஓட்டலில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தொழிலதிபர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏ.வி ஆர் ரவுண்டானா பகுதியில் பிரபல நட்சத்திர ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி இருக்கின்றது. இங்கு இயங்கி வரும் மசாஜ் சென்டருக்கு வினோத்குமார் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பெண்கள் அவரை பாலியல் தொழிலுக்காக அழைத்துள்ளனர். ஆனால் வினோத் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து வினோத்குமார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் தங்கும் விடுதிக்கு சென்று அதிரடி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாணவர்களே… உயர்கல்வி பயில கல்விக்கடன்…. அதிரடி அறிவிப்பு….!!!!

உயர்கல்வி பயில விரும்பும் மாணவ மாணவிகள் கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்ற சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் விருப்பமுள்ள மாணவர்கள் https.www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கல்விக் கடன் பெறலாம். வங்கி சேமிப்பு கணக்கு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பான் கார்டு, ஆதார் அட்டை, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, கல்லூரிகளில் சேர்க்கைக்கான கணக்கீட்டு கடிதம், கல்வி கட்டணம் விவரம் ஆகியவற்றை கல்விக்கடன் பெற தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ராஜ கணபதி கோவில்…. நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்…. பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

கோவிலில் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ராஜ கணபதி கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாட்கள் தொடர்ந்து விநாயகருக்கு அலங்கார பூஜைகள் நடப்பது வழக்கமாக இருக்கிறது. அதன்படி இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 9 நாட்களாக பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து விழாவின் இறுதியில் விநாயகருக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. இதற்கு முன்பாக கோவிலில் சிறப்பு யாகங்கள் நடைபெற்று விநாயகருக்கு சந்தனம் உள்ளிட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் தேக்கம்பட்டி பகுதியில் சுப்ரமணி மகள் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். இதனையடுத்து அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகளை கூறி…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள பெரமனூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கலக்கம்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு இவருக்கும், பட்டதாரி பெண்ணிற்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசையாக பேசி அந்தப் பெண்ணை அவர் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து கர்ப்பமான அந்தப் பெண்ணை செந்தில்குமார் திருமணம் செய்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோர விபத்தில் பறிபோன உயிர்…. உறவினர்களின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சீரங்கனூர் பகுதியில் கூலித் தொழிலாளியாக வேணுகோபால் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் தாரமங்கலம் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இதேபோன்று நரியப்பட்டி பகுதியில் வசித்து வரும் கணேசன் மகன் மெய்யழகன் என்பவர் வெள்ளக்கல்பட்டி பிரிவு சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது மெய்யழகன் வந்த மோட்டார் சைக்கிளும், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகன் கண் எதிரே…. தந்தைக்கு நேர்ந்த துயரம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மகன் கண் எதிரே தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நாகியம்பட்டி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவராக நடராஜன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், தாமரைசெல்வன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நடராஜன் தனது மகன் தாமரைசெல்வனுடன் செந்தாரப்பட்டி ஏரிக்கு மீன்பிடிக்க சென்றார். அப்போது நடராஜன் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தார். அங்கு அருகில் இருந்த மகன் தாமரைச்செல்வனுக்கு  நீச்சல் தெரியாததால் தந்தையை காப்பாற்ற முடியாமல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற குதிரை…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கார் மோதி குதிரை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் தேவியாக்குறிச்சி அய்யனார் கோவில், சார்வாய் புதூர் பொன்னியம்மன் கோவில், தென்குமரை அருஞ்சோலை அம்மன் கோவில் போன்ற கோவில்களுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக குதிரைகளை நேர்ந்து விடுவது வழக்கமாக இருக்கின்றது. அந்த  குதிரைகள் தலைவாசல் ஏரி பகுதியில் மேய்ச்சலுக்கு வந்து செல்கின்றது. அதேபோன்று மணிவிழுந்தான் ஏரிக்கு மேய்ச்சலுக்கு கோவில் குதிரை ஒன்று வந்துள்ளது. அந்தக் குதிரை சேலம்-சென்னை தேசிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென இப்படி சொல்றாங்க…. ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

வேலை வழங்கக்கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று இருக்கிறது. இந்த சுங்கச்சாவடியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதியுடன் சுங்கச்சாவடி குத்தகை ஒப்பந்தம் முடிவடைந்தது, பின் குஜராத்தைச் சேர்ந்த புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் பாஸ்டேக்  செயல்படுத்தப்பட்டதால் 30 ஊழியர்கள் மட்டும் போதும் என்றும், 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி இல்லை என்றும் திருப்பி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள்…. அமைச்சர் கே.என்.நேரு அதிரடி அறிவிப்பு….!!!!

சேலம் மாவட்டம் அருகே உள்ள வாய்க்கால் பட்டறையில் பகுதியில் அமைச்சர் கே.என். நேரு ‘நகருக்குள் வனம் ‘ என்ற திட்டத்தை  இன்று தொடங்கி வைத்தார் . அதன் பிறகு செய்தியாளர்களிடம்  பேசிய அவர்,ஒரு லட்சம் மரக்கன்றுகளை ‘நகருக்குள் வனம்’ என்ற திட்டத்தின் கீழ் நடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இதனை அடுத்து மழைநீரை பாசன பகுதிகளுக்கு கொண்டு செல்ல மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பாசனற்ற ஏரிகளை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதை பார்த்ததும் ஓடிய விவசாயி…. கிணற்றில் விழுந்து பரிதாபம்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

பாம்பைப் பார்த்து பயந்து ஓடிய விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கடம்பூர் இந்திரா நகர் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாய இருந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவி இருக்கின்றார். இதில் சிவகுமார் தனது விவசாய தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது சிவக்குமாருக்கு அருகில் பாம்பு ஒன்று வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் எதிர்பாராத விதமாக திடீரென சிவகுமார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படி குளிக்க கூடாது…. அத்துமீறிய 5 வாலிபர்கள்…. கைது செய்த போலீஸ்…..!!

பொதுமக்களுக்கு இடையூறாக அருவியில் குளித்துக் கொண்டிருந்த வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மலைப்பாதையில் ஆங்காங்கே திடீரென அருவிகள் தோன்றியது. அந்த பகுதியில் உள்ள சிறு அருவிகளில் ஒரு சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது 3-வது கொண்டை ஊசி வளைவு அருகில் அரை நிர்வாணமாக 5 பேர் குளித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் இடத்தில் இதுபோன்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் பாஜக கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பழையபேட்டை மேட்டு தெரு பள்ளிவாசல் அருகில் வைக்கப்பட்ட கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி நேற்று புதிதாக வைக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக கொடிக்கம்பம் வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தந்தை-மகனின் கைவரிசை…. கைது செய்த போலீஸ்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

தலைமை ஆசிரியரிடம் நகை பறித்து சென்ற 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி வங்கி தெருவில் ஜனத்சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளி தலைமை ஆசிரியராக இருக்கின்றார். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அஸ்தம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் கத்தியை காட்டி ஜனத்சித்ரா கழுத்தில் கிடந்த 6 3/4 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற மௌனிஷ்…. நடந்த துயர சம்பவம்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

விளையாடச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுண்டங்கிபாளையம் பகுதியில் ராமசாமியின் மகன் மௌனிஷ் வசித்து வந்தார். இவர் பள்ளி விடுமுறையை தொடர்ந்து சேலம் மாவட்டம் துளுக்கனூர் ஆனைக்கல் மேட்டில் உள்ள தனது தாய்மாமன் தினேஷ் என்பவரது வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வெளியில் விளையாட சென்ற மௌனிஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாய்மாமன் மௌனிஷை பல இடங்களில் தேடி வந்த நிலையில் அவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏரியில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 11 வயது சிறுவன்…. பின்னர் நடந்த சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் வையப்பமலை, சுண்டங்கி பாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். அவரின்  மகன் மௌனிஷ்(11)  அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  பள்ளிகள் திறக்கப்படாததால்  மௌனிஷ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள துளுக்கணுர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது துளுக்கன் ஊர்  ஏரியில் தனது நண்பர்களுடன் மௌனிஷ் குளிக்கப்பதற்காக  சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” சிக்கி கொண்ட 4 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரிலிருந்து ஆத்தூருக்கு லாரியின் மூலம் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் போலீசார் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அரிசி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்து டிரைவர் உட்பட லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. ஆட்டோ டிரைவர் கைது…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானம்பட்டியில் மணி என்ற மணிகண்டன் வசித்து வந்தார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்து அவர் டவுன் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தாத்தா-பாட்டி உயிரோடு எரிப்பு…. மாட்டி கொண்ட பேரன்…. பரபரப்பு வாக்குமூலம்….!!

தாத்தா-பாட்டியை உயிரோடு எரித்துக் கொலை செய்த பேரன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள கொத்தாம்பாடி பாரதியார் நகர் பகுதியில் காட்டுராஜா-காசி அம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் தங்கியிருந்த வீட்டில் கடந்த 12-ஆம் தேதி தீ வைக்கப்பட்டு 2 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தாத்தா-பாட்டியை தீ வைத்து உயிரோடு எரித்துக் கொன்றது 16 வயதுடைய அவர்களது பேரன் தான் என்பது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வாலிபர் கொலை வழக்கு” வசமா சிக்கிய சிறுவன்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒரு சிறுவனை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வினோத்குமார் மற்றும் அவருடைய நண்பர்களை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதனால் படுகாயமடைந்த வினோத்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை […]

Categories

Tech |