200 கோடி மிரட்டிப் பணம் பறித்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது தொடரப்பட்ட வழக்கில், பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட ஜாக்குலின், இவ்வழக்கில் தற்போது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2017இல் இரட்டை இலை சின்னத்திற்காக டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தரகர் சுகேஷ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
