கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேருந்து நிலையம் அருகே சேமியா மூட்டைகளுக்கு இடையே கேரளாவிற்கு ஒரு டன் புகையிலை பொருட்கள் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான கலியக்கவிலை பேருந்து நிலையம் அருகே அன்வர் என்பவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தன் வீட்டில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை பதுக்கி கேரளாவிற்கு கடத்துவதாக தக்கலை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் […]
