ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் மீது மரம் முறிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் சேது எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரத்திற்கு வந்தடைந்த ரயில் அதிகாலை 3.45 மணியளவில் ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த ரயில் ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை -பெருங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. […]
