சூறாவளிக்காற்றில் நங்கூர கயிறுகள் அறுந்து விழுந்து பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதம் அடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்று வீசியது. இதனால் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த அந்தோணி ராசு, கிருபை, கென்னடி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 10 விசைப் படகுகளுக்கான நங்கூர கயிறுகள் அரிந்து ஒன்றோடு ஒன்று மோதி உள்ளது. இதில் அனைத்து படகுகளும் சேதம் அடைந்தது. இதனைக் கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து மீனவ சங்க தலைவரான ஜேசுராஜாவிடம் கூறியுள்ளனர். […]
