சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைகளை உதவி கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி, மாவடி, மலையடிப்புதூர், மகிழடி, ராஜபுதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென சூறைக்காற்று வீசியது. இதனால் அப்பகுதியில் பயிர் செய்யப்பட்டிருந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. இந்நிலையில் சேதமடைந்த வாழைகள் ஏத்தன் ரத கதலி வகைகளை சேர்ந்த 8 மாத வாழைகள் ஆகும். இதனால் விவசாயிகள் சேதமடைந்த வாழைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். […]
