செவிலியர்களை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள நெடுஞ்செழியன் காலனி பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விபத்தில் காயமடைந்து உடுமலை பகுதியில் உள்ள கோகுல் பாலிகிளினிக் என்ற தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். அங்கு சேகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் மருத்துவமனைக்கு நெடுஞ்செழியன் காலனி பகுதியில் வசிப்பவர்கள் சிலர் வந்து செவிலியர்களை தாக்கி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு பணியாற்றும் செவிலியரான செல்வி என்பவர் […]
