செல்போன் திருடியவருக்கு 14 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பகுதியில் சங்கர நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் 25-ஆம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்குள்ள மண்டபத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது தலைமாட்டில் வைத்திருந்த செல்போனை மர்மநபர் ஒருவர் திருடி சென்று விட்டார். அந்த செல்போனின் மொத்த மதிப்பு ரூ.40 […]
