செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி. அரசுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர், கடந்த 10ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி […]
