செய்யூர் அருகே உள்ள நைனார் குப்பம் கிராமத்தில் இயங்கிவரும் அரசு நடுநிலை பள்ளி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி நைனார் குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இருக்கின்றது. அப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கின்றன. இருந்தாலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் முழுமையாக கட்டப்படவில்லை. […]
