உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதாகையுடன் நேரலையில் தோன்றி கைது செய்யப்பட்ட செய்தியாளர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாகப் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், ரஷ்யாவின் ஒரு அரசு செய்தி தொலைக்காட்சியில் மெரினா ஓவ்சியனிகோவா என்ற பெண் செய்தியாளர் நேரலையின் போது ‘போரை நிறுத்துங்கள்’ என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் வந்திருக்கிறார். அவர் வைத்திருந்த பதாகையில், ‘போரை நிறுத்துங்கள்’, ‘பிரச்சாரத்தை நம்பவேண்டாம்’, ‘உங்களிடம் பொய் கூறுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் […]
