புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 26ஆம் தேதி டெல்லியில் விவசாயிகள் ட்ராக்டர் பேரணி நடத்தினர். இது வன்முறையில் முடிந்ததை தொடர்ந்து இந்தப் போராட்டம் உலக அளவில் பேசப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பருவநிலை மாற்ற ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல்வேறு சர்வதேச பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க […]
