தமிழகத்தில் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் “செம்மொழி நூலகம்” என்ற பெயரில் நூலகம் அமைப்பதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி 275 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியரின் நலனுக்காக செம்மொழி நூலகம் என்ற பெயரில் தலா ஒரு நூலகம் அமைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தினை செயல்படுத்த தேவைப்படும் 2,74,52,000 ரூபாய் நிதியை ஒதுக்கி தமிழக […]
