செம்மொழி நிறுவனத்தின் ஒரு முக்கிய அம்சமாக பிரெய்லி நூல் பதிப்பு திட்டம் அமைந்துள்ளது. இது பார்வை மாற்றுத் திறனாளிகளுக்காக இருக்கிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், 41 தமிழ் செவ்வியல் நூல்கள் உட்பட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டத்தின் பணிகள் நிறைவடைய இருக்கிறது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நம்பியகப் பொருள், யாப்பெருங்கலங்காரிகை, தண்டியலங்காரம், புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல், இறையனார் அகப்பொருள், முத்தொள்ளாயிரம், மணிமேகலை, சிலப்பதிகாரம், […]
