அனுமதியின்றி செம்மண்ணை அள்ளி சென்ற 2 டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய டிரைவர்களை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் ராஜதானி காவல்துறையினர் ஆண்டிபட்டியை அடுத்துள்ள பாலக்கோம்பை கென்னடிநகர் பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த 2 டிராக்டர்களை நிறுத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் டிராக்டரில் இருந்தவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்தது தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டிராக்டரை ஓட்டி வந்தவர்கள் பாலக்கோம்பை பகுதியை […]
