இயற்கை உரத்துக்காக நாகையில் அறுவடை முடிந்த நிலங்களில் மேய்ச்சலுக்கு ஆடுகள் விடப்பட்டுள்ளன. நாகை விவசாயிகள் நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடியை 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செய்வதற்கு தயாராகி வருகின்றனர். இதற்காக திருமருகல், நாகை, கீழ்வேளூர், திட்டச்சேரி, பாலையூர், கீழையூர் ஆகிய பகுதிகளில் அறுவடை முடிந்த விளைநிலங்களில் விவசாயிகள் உரமேற்ற செம்பறி ஆடு பட்டிகளை புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் களமிறக்கியுள்ளனர். அந்த செம்மறி ஆடுகள் அறுவடைக்குப்பின் வரப்புகள் மற்றும் வயல்களில் கிடைக்கும் வைக்கோல் […]
