செம்பட்டி பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் கிளினிக் வைத்து நடத்தி வந்த போலி மருத்துவர்கள் கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செம்பட்டி அடுத்த சித்தையன்கோட்டை பேரூராட்சி சேடப்பட்டி என்ற பகுதியில் பெருமாள் என்பவர் வசித்துவருகிறார்.அவர் மருத்துவப் படிப்பு படிக்காமல் சொந்தமாக கிளினிக் நடத்தி அலோபதி முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. அதனடிப்படையில் இணை இயக்குனர் டாக்டர் சிவக்குமார் தலைமையிலான சுகாதாரத் துறையினர் மற்றும் செம்பட்டி […]
