Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுவர்களுக்கு இடையே சிக்கி தவித்த மான்…. பா.ஜ.க. நகர தலைவர் அளித்த தகவல்…. அதிகாரிகளின் செயல்….!!!!

சுவர்களுக்கு இடையே மான் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதியில் பா. ஜ. க. நகர தலைவரான தணிகைமணி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு ஒன்று உள்ளது. இந்த தோப்பிற்கு நேற்று முன்தினம் அருகில் இருக்கும்  காட்டில் இருந்து வழி தவறி மான் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் அந்த மான் தோப்பில் அமைந்துள்ள பம்புசெட் அறை சுவர் மற்றும் சுற்று சுவர்களுக்கு இடையே சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துள்ளது. இதனை பார்த்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…. கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. சென்னையில் பரபரப்பு….!!!!

காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்வி என்ற பெண்ணை  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மணிவண்ணனுக்கும் அவரது மனைவி செல்விக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வி  மகனுடன் சேர்ந்து தனது  தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு  செல்வியின் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வேலை… வேலை… சென்னையில் உள்ள இளைஞர்களுக்கு…. இன்று(ஜூன் 24) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்….!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக மாநிலத்தில் வேலை வாய்ப்பு முகாம் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்க வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகின்றது. இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் அலுவலகங்களும் இணைந்து இன்று (ஜூன் 24ஆம் தேதி) தனியார் வேலைவாய்ப்பு முகாமை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காணாமல் போன செல்போன் கோபுரங்கள்…. புகார் அளித்த நிறுவன ஊழியர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

செல்போன் கோபுரங்களை திருடிய மர்ம நபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் கோசலகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பிராஜெக்ட் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோசலகுமார் பணிபுரிந்து வரும் அந்த தனியார் நிறுவனம் கடந்த 2010-ஆம் ஆண்டு ஒத்தக்குதிரை, தண்ணீர்பந்தல் புதூர், நல்லகவுண்டன்பாளையம், கள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள செல்போன் கோபுரங்களை சுமார் 1 1/2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த செல்போன் கோபுரம் […]

Categories
மாநில செய்திகள்

“எனது மகளை எப்படி அடிக்கலாம்”….? அண்ணனின் வெறிச்செயல்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த ராசு(32) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கனகா. இவர்களுடைய மகள் மகாலட்சுமி(5), ராசுவின் தம்பி சந்திரன் என்ற விக்கி (19) இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றார்கள். இந்தநிலையில் சந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கம்போல் மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது அண்ணன் மகள் மகாலட்சுமி செல்போன் விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறாள். இதனை கண்ட சந்திரன் சிறுமியை கண்டித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“எடப்பாடி பழனிசாமி வாகனத்தை சூழ்ந்து எதிர்கோஷம்”….. திடீர் பரபரப்பு….!!!!

சென்னையில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். வழிநெடுகிலும் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் வாகனம் மீது மலர்தூவி வரவேற்றனர். இதற்கிடையே பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றபோது வாகனங்களை மறித்து ‘ஓபிஎஸ் வாழ்க’ என தொண்டர்கள் முழக்கமிட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே சென்னை, பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லதில் இருந்து பொதுக்குழு நடக்கும் வானகரத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடன் செயலியில் கடன் பெற்ற வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில்  பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது  குடும்ப செலவுக்காக கடன் செயலி மூலம் 5 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனால்  பாண்டியன் 1,500 ரூபாய் மட்டும்  பாக்கி வைத்துள்ளார். இதனையடுத்து பாண்டியனின் செல்போனிற்கு  உடனடியாக மீதி பணத்தை செலுத்துமாறு குறுஞ்செய்தி ஒன்று  வந்துள்ளது. ஆனால் பாண்டியனால் பணத்தை   செலுத்த முடியவில்லை. இந்நிலையில்   பாண்டியனின் புகைப்படத்தை பாலியல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. மனைவியை அடித்து கொலை செய்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மனைவியை அடித்து கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில் வியாபாரியான   சாகுல் அமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்ரின் ரோஸ் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பிறந்து 10 மாதம் ஆன பெண் குழந்தை ஒன்று உள்ளது.  இவரது    வீட்டில் நீண்ட நேரமாக குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு அப்ரின் ரோஸ் மயங்கிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற வாலிபர்…. கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

ஏ.டி.எம். எந்திரத்தை  உடைத்து பணம் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பெரியமேடு பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மையத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பணம் எடுத்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஏ.டி.எம். மையத்திற்கு வந்த வாலிபர் ஒருவர்  எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை திருட முயன்றுள்ளார்.  ஆனால் பணம் வராததால் அந்த வாலிபர் சென்றுவிடடார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி சண்டை போடுற?…. மனைவியை கொலை செய்த கணவர்…. அதிரடி உத்தரவிட்ட நீதிபதி….!!!!

பெண்ணை  கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள டி.பி. சத்திரம் பகுதியில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஹரிகிருஷ்ணன்  கடந்த 2014-ஆம் ஆண்டு  மது குடித்துவிட்டு தனது மனைவியிடம்  தகராறு செய்துள்ளார். அப்போது சரஸ்வதி அவரை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன் சரஸ்வதி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  சரஸ்வதி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மெட்ரோ : புது ரூட்டில் செம க்யூட்….. எந்தெந்த ஏரியாக்கள் வழியாக தெரியுமா?….!!!!

சென்னை மெட்ரோ ரயிலின் விரிவாக்கத் திட்டத்தில் ஆரஞ்சு லைனில் உருவாகும் புதிய வழித்தடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தற்போதைய நிலையில் கிரீன் லைன், ப்ளூ லைன் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடம் படிப்படியாக விரிவாக்கப்பட உள்ளது. அதன்படி ப்ளூ லயனில் சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் பணிமனை வரையிலும், கிரீன் லைனில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவன்….. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

10-ஆம்  வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் எழில்நகரில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10-ஆம்  வகுப்பு படிக்கும் முகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் 10-ஆம்  வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால் முகேஷ் தேர்வில்  தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முகேஷ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவ்வளவு அமெரிக்க டாலரா?…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

சட்டவிரோதமாக கொண்டு வந்த அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அதைப்போல் நேற்று சுங்கா இலாகா  அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்ற  வாலிபரின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் முகமது ஷாருக்கான் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வேலை.. வேலை.. வேலை… சென்னையில் உள்ள இளைஞர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக மாநிலத்தில் வேலை வாய்ப்பு முகாம் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்க வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகின்றது. இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் அலுவலகங்களும் இணைந்து வருகின்ற ஜூன் 24ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாமை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க…! மழை, வெள்ளம் குறித்த புகாருக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு …..!!!!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது குறிப்பாக கடந்த 2 நாட்களாக சென்னையில் மழை கொளுத்தி வருகிறது. இந்த மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் வெள்ளம் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் சிரமப்படலாம். எனவே சென்னையில் மழை வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மாநில அரச கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க 1070, 1077 சென்னை மாநகராட்சி, 1913 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும்…. கோரிக்கை மனுவை அமைச்சரிடம் அளித்த வணிகர் சங்க தலைவர்….!!!!

நடைபெறும் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளால் சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சென்னை மாவட்டத்தில் அம்பத்தூர்-ஆவடி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை தற்போது தமிழக அரசு விரிவாக்க முடிவு செய்து பணிகள் தொடங்க உள்ளது. இதனால் சாலையின் ஓரங்களில் மலர், காய்கறி  போன்ற கடைகள் நடத்தும்  சிறு தொழில்  வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, மாநில துணை தலைவ ராமலிங்கம் உள்ளிடோர்  நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. […]

Categories
மாநில செய்திகள்

“15 மாவட்டங்களில் கனமழை”….. அப்ப சென்னையில் இன்னைக்கு இருக்கு கச்சேரி….!!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் குறைந்த தேர்ச்சி விகிதம்….. மேயர் ப்ரியா எடுத்த அதிரடி முடிவு…..!!!!

சென்னையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவில் சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 20 பள்ளிகள் 100 சதவீத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

திமுக மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் கனிமொழிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் மருத்துவர்கள் அறிவுரையின்படி. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று(ஜூன் 21) முதல்… கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்…. உடனே கிளம்புக….!!!

சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் இன்று(ஜூன் 21) முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.  மாநகா் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 60 வயதுக்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.நடப்பாண்டு  ஜூன் மாதம் வரை பயணம் செய்யும் வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவ்வளவு நன்மை இருக்கா?…. மரங்களில் தொங்கும் வவ்வால்கள்…. பார்வையிடும் பார்வையாளர்கள்….!!!!

அருங்காட்சியகத்தில் தொங்கும் வவ்வால்களை பார்வையாளர்கள் பார்த்து செல்கின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரில் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியக வளாகத்தில் மிகவும் பழமையான மரங்கள் அதிகளவில் இருக்கிறது. இந்நிலையில் மரங்களின் கிளைகளில் வவ்வால்கள் தொங்கியபடி ஒலிகளை எழுப்பி வருகிறது. இதனை அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது. இந்த வவ்வால்கள் இரவில் இரை தேடி செல்கின்றது. மீண்டும் மரங்களுக்கு வந்து விடுகின்றது. இந்த வவ்வால்கள்  பூக்களின் மகரந்த சேர்க்கைக்கும், மரத்தின் விதைகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மூத்த குடிமக்கள் கவனத்திற்கு” நாளை முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது…. வெளியான அறிவிப்பு….!!!!!

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள்  வழங்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவசமாக பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டது. தற்போது அடுத்த அரையாண்டிற்கான டோக்கன்கள் அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, சென்ட்ரல் பேருந்து நிலையம், பாரிமுனை, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி, வடபலனி, ஆதம்பாக்கம், வேளச்சேரி, அண்ணா நகர், கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம், பூந்தமல்லி, பெரம்பூர் பேசின் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து ரயில் நிலையங்களிலும்…. இனி இது கிடையாது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. வடமாநிலங்களில் போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களில் புகுந்து ரயில்களை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்னிபத போராட்டத்தால் ரயில் நிலையங்களில் வன்முறை சம்பங்கள் தடுக்க தென்னக ரயில்வே இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
Uncategorized மாநில செய்திகள்

367 மெட்ரிக் டன் இயற்கை உரம்…. காய்கறி, பழக்கழிவுகளை கொண்டு தயாரிப்பு….!!!!

சென்னையில் உள்ள மாதவரம் சின்ன சேக்காடு என்ற பகுதியில் காற்று புகும் வகையில், மக்கும் குப்பைகளை பதனிடும் நிலையம் ஒன்று உள்ளது. இதில் தினந்தோறும் சேகரிக்கப்படும் 100 மெட்ரிக் டன் அளவில் காய்கறி மற்றும் பழக் கழிவுகள் போன்றவற்றைக் கொண்டு, இயற்கை உரமானது தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படுகின்ற கழிவுகள், எந்திரங்களின் மூலம் சிறு, சிறு துண்டுகளாக வெட்டப்படுகின்றன. மேலும் அதனை திறந்தவெளியில் வைத்து காய வைக்கின்றனர். இதன் பிறகு, அவற்றை சலித்து உரமாக மாற்றி அமைக்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

“4 வருடங்களாக ஆஜராகவில்லை”… செங்கல்பட்டு கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு….!!!!!!!!

சென்னை சோலையூர் எனும் பகுதியை சேர்ந்தவர் வைரவநாதன். இவர் செங்கல்பட்டு மாவட்டம் பெருமாட்டுநல்லூர் என்னும் கிராமத்தில் 1.43 ஏக்கர் நிலத்தை கடந்த 2007ஆம் வருடம் வாங்கி செங்கல்பட்டு பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்கின்றார். அதன்பின் தனது நண்பர் மோகன் என்பவரிடம் சொத்து ஆவணங்களை நம்பிக்கையின் பெயரில் கொடுத்திருக்கின்றார். இந்த நிலையில் வைத்தியநாதனின் சொத்துக்களை போலி ஆவணங்களை தயாரித்து மோகன் தனது பெயரில் கடந்த 2013 ஆம் வருடம் பவர் வாங்கியது வைரவநாதனுக்கு தெரியவந்துள்ளது. மேலும் இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற செல்போன் திருட்டு…. வசமாக சிக்கிய காதலர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

செல்போன் திருடிய காதலர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து  தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி பயணி ஒருவரின் செல்போனை  மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பயணி உடனடியாக ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயணிகளுடன் கிளம்பிய விமானம்…. திடீரென ஏற்பட்ட கோளாறு…. அவதி அடைந்த பயணிகள்….!!!!

விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பகுதியில் விமான நிலையம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து நேற்று  இரவு ஓமன் நாட்டின் தலைநகருக்கு 150-க்கும் மேற்பட்ட  பயணிகளுடன் விமானம் ஒன்று  கிளம்ப தயார் ஆனது. அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில்  விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் நீண்ட நேரம் போராடி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரை  சரி செய்தனர். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… “இந்த சாலை வழியாகச் செல்லக்கூடாது”…. போக்குவரத்து போலீசார் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை மெட்ரோ ரயில் 5ம் கட்ட விரிவாக்கத்திற்கான கட்டுமான பணிகள் மேடவாக்கம் சோழிங்கநல்லூர் இடையில் செம்மொழி சாலையில் நடைபெற்று இருக்கிறது. இதனால் செம்மொழி சாலையில் டிஜிட்டல் மார்ட் அருகில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து மேடவாக்கம் செம்மொழி சாலை வழியாக பெரும்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் தற்போது பள்ளிக்கரணை போலீஸ் நிலைய சந்திப்பு வழியாக செல்கின்றன. இதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் பெரும்பாக்கம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு…. மாநகராட்சி புதிய அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா நோயாளிகள் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அரசு வேலை வாங்கி தருகிறேன்”…3 கோடி பணம் மோசடி… அரசு அதிகாரி போல் நடித்து நேர்முகத்தேர்வு நடத்தியவர் கைது…!!!!!!!

மத்திய மாநில அரசு பள்ளிகளில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து 3 கோடிக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட மோகன் ராஜ் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இவர் அரசு துறை அலுவலகங்களில் நேர்முகத்தேர்வு நடத்தி போலி பணி நியமன ஆணைகளை வழங்கி இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார். மேலும் இந்த மோசடி செயலில் அவருக்கு சென்னை சேத்துப்பட்டு மங்களபுரம் ஐந்தாவது தெருவைச் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டில் வேலை வாங்கி தருகிறேன்”… மோசடி செய்த இளம்பெண்… அதிரடி கைது…!!!!!!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கும்பகோணம் பகுதியை  சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளது. சேப் மூன் வேல்டு எனும் பெயரில் வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வமாக […]

Categories
மாநில செய்திகள்

எனக்கு சரக்கு வேணும்…. முதலிரவில் 90’s Kid-க்கு நடந்த சம்பவம்…. அய்யோ பாவம்….!!!!

சென்னையை சேர்ந்த தமிழ்வாணன் (32) பல ஆண்டுகளாக பெண் தேடி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு புரோக்கர் மூலம் பூஜா என்ற பெண்ணை சந்தித்து திருமணம் முடித்தார். ஆனால் முதலிரவில் பூஜா, குடிக்க மது கேட்க ,அதிர்ந்து போன தமிழ்வாணன் அறிவுரை கூறியுள்ளார். அதனால் தாம்பத்தியத்திற்கு பூஜா தடை போட்டுள்ளார். அதற்கு மறுநாளே பணம் மற்றும் நகைகள் உடன் தப்பித்து விட்டதாக தமிழ்வாணன் போலீசில் புகார் அளித்தார். மேலும் தமிழ்வானனுக்கு வயது அதிகம் என்று கூறி, அவரிடம் 1.35 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஜூன் 21 முதல் ஜூலை 31 வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மகளிர், மூத்த குடிமக்கள் மற்றும் 5 வயது வரை உள்ள சிறார்கள் அனைவருக்கும் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் கிடையாது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப் படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வருகின்ற ஜூன் இருபத்தி ஒன்றாம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.டோக்கனை பெற்றுக்கொண்டு 60 வயதிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூதாட்டத்தில் பறிபோன 20 லட்ச ரூபாய் பணம்…. வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும், பிரணவ், பிரதாப் என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நாகராஜன் தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து சூதாட்டம் விளையாடியுள்ளார். ஆனால்  நாகராஜன் 20 லட்ச ரூபாய் வரை சூதாட்டத்தில் இழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே…! எலியை அடித்தபோது…. உயிரே போன பரிதாபம்…. பெரும் அதிர்ச்சி…..!!!!!

சென்னை பொழிச்சலூர், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் லட்சுமி(35). இவர் தனது வீட்டில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வரும் அட்டகாச எலியை பிடிக்க முற்பட்டுள்ளார். தனது 12 வயது மகனோடு சேர்ந்து எலியை அடித்து கொல்ல வேண்டும் என எண்ணி அடிக்க முற்பட்ட அவர் எதிர்பாராத விதமாக மயங்கி கீழே விழுந்தார். இதில் நெற்றியில் அடிப்பட்டு ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரது மகன் நடந்ததை தந்தையிடம் கூறி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே உஷார்…. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி…. உச்சகட்ட பரபரப்பு சம்பவம்….!!!

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 100 பேரிடம் போலி பணி நியமன ஆணைகளை கொடுத்து சுமார் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மோகன் ராஜ் என்பவர் போலி கன்சல்டன்ஸி நடத்தி,அதன் மூலமாக ஆவின் உள்ளிட்டவற்றில் இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அசல் கல்விச் சான்றிதழை பெற்று மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக தனசேகரன் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து மாற்றம்: இனி நிரந்தரமாக இப்படித்தான்….. வாகன ஓட்டிகளுக்கு புதிய அறிவிப்பு…..!!!!!

சென்னையில் அதிக மழையின் காரணமாக வாகனங்கள் செல்ல கூடிய வழக்கமான பாதைகள் சேதமடைவதாலும், பராமரிப்பு பணிகள், மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட முக்கிய காரணங்களால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். அந்த வகையில் கடந்த மாதம் முக்கிய பிரதான சாலையில் போக்குவரத்தை சீர் செய்யும் விதமாக முதல் கட்டமாக தற்காலிக சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் கடந்த மே மாதம் 22ஆம் தேதி செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை காரணமாக தற்போது போக்குவரத்து பெருமளவில் குறைந்துள்ளது. அதனால் இனி தாசபிரகாஷ் சந்திப்பை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. 12 குடிசைகள் எரிந்து நாசம்…. சென்னையில் பரபரப்பு…!!

தீ விபத்து ஏற்பட்டதில் 12 குடிசை வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி இந்திரா காந்தி நகர் 20-வது தெருவில் இருக்கும் குடிசை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஐகோர்ட்டில்….. “மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்”….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக பரவி வந்த தொற்று அதன்பிறகு படிப்படியாக குறைந்து மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். பள்ளி குழந்தைகளும் மீண்டும் பள்ளிக்கு சென்று பாடம் படிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக இன்று ஒரு நாளில் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா அதிகரித்து வருவதால் சென்னை உயர் நீதிமன்றம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் கட்டுப்பாடுகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடித்து கொலை செய்யப்பட்ட வாலிபர்…. பெண் உள்பட 4 பேர் கைது…. சென்னையில் பரபரப்பு…!!

வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை காசிம் தெருவில் தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான தாவித்ராஜா(20) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தெற்கு நுழைவு வாயிலில் மயங்கிக் கிடந்த ராஜாவை அவரது தாய் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதுதான் டிடிஆர் களின் வேலை”… இதுவரை எங்களிடம் புகார்கள் எழுப்பப்படவில்லை…. சென்னை கோட்ட மேலாளர் பேட்டி…!!!!!!!!

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியபோது, ரயில்வேயில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காணும் விதமாக கண்டுபிடிப்புகள் மற்றும் திட்டங்களுக்கு ரூபாய் ஒன்றரை கோடி வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைய தளத்தின் மூலமாக கண்டுபிடிப்பாளர்கள் எந்தவித முறைகேடும் இல்லாமல் நியாயமான முறையில் தேர்ந்தெடுக்க இருக்கின்றோம். அதேபோல் கண்டுபிடிப்பாளர்கள் உருவாக்குகின்ற தொழில்நுட்பங்களுக்கு அவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படுகிறது. ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் விரிசல்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உரிய ஆவணம் எங்கே”….? சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 46 லட்சம் ரூபாய் பறிமுதல்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!!!!!

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இன்ஸ்பெக்டர் ரோகித் குமார் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ஐந்தாவது நடைமேடையில் வந்து நின்றுள்ளது. அந்த ரயிலில் இருந்து சந்தேகப்படும்படியாக ஒரு நபர் இறங்கி வருவதை போலீசார் கவனித்தனர். இதனையடுத்து அந்த நபரை மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் அவர் வைத்திருந்த இரண்டு பைகளில் உரிய ஆவணங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த வீடியோவை வெளி விட்டுருவேன்…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!!

சென்னையை அடுத்த கொளத்தூர் சேர்ந்த 28 வயது இளம்பெண் திருமணமாகி கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகின்றார். 2020 ஆம் வருடம் அவருக்கு முகநூல் மூலமாக திருநின்றவூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த விக்ரம்(33) என்பவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது விக்ரம் இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே விக்ரமுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்”… கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!!!!

சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (31). இவரை கொடுங்கையூர் போலீசார் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்தநிலையில் கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் ராஜசேகர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதில் போலீசார் தாக்கியதில் தான் ராஜசேகர் இறந்து போனார் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர், பொன்ராஜ் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ராஜசேகரின் பிரேத பரிசோதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

7 நாட்களுக்கு ரயில்கள் ரத்து செய்யப்படும்….. அறிக்கை வெளியிட்ட அதிகாரிகள்….!!!!

7  நாட்களுக்கு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் செல்கின்றனர். இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை வழியாக செல்லும் ரயில்கள் இரவு 10.25 ,11.25 ,11.45  நேரங்களுக்கு  மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் அங்கிருந்து திரும்பும் ரயில்கள் இரவு 11.20-க்கும்  மற்றும் 11.40-க்கும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் மின்சார ரயில்கள் நாளை முதல் 18-ஆம் தேதி வரையும், 20-ஆம்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீர் தொடர்பான திருப்புமுனை கண்டுபிடிப்பு…. சர்வதேச விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.ஐ.டி. பேராசிரியர்….!!

சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியருக்கு நீர் தொடர்பான திருப்புமுனை கண்டுப்பிடிப்புக்காக சர்வதேச விருது வழங்கப்படவுள்ளது. சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் பிரதீப்புக்கு மதிப்புமிக்க ‘இளவரசர் சுல்தான்பின் அப்துல்அஜிஸ் தண்ணீருக்கான சர்வதேச விருது’ எந்த ஒரு துறையிலும் நீர் தொடர்பான திருப்புமுனை கண்டுபிடிப்புக்காக வழங்கப்படுகிறது. இந்நிலையில் குடிநீரில் இருந்து ஆர்சனிக்கை விரைவாக அகற்றுவதற்கு, குறைந்த விலையில் சிறிய அளவிலான பொருட்களை உருவாக்கி, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தண்ணீரை பேராசிரியர் பிரதீப்பின் குழுவினர் வழங்கியது. இதனால் பேராசிரியர் பிரதீப்புக்கு விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் செப்டம்பர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 6-ல் ஒன்று…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னையில் உள்ள CCTV கேமராக்களில் 6- இல் ஒன்று வேலை செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மொத்தமாக காவல் துறை சார்பாக 2500 கேமராக்களும், தனியார் மற்றும் அரசு இணைந்து 70,000 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 656 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் ஆறில் ஒரு கேமரா செயல்பாடின்றி இருக்கின்றன. சென்னை தெற்கு, கிழக்கு பகுதிகளில் அதிக அளவு கேமராக்கள் செயல்படவில்லை. நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடற்கரை மணலில் புதைந்து கிடந்த சாமி சிலைகள்…. பொதுமக்களின் தகவல்…. தொல்லியல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை….!!

பட்டினப்பாக்கம் கடற்கரை மணலில் புதைந்து கிடந்த 2 சாமி சிலைகளை காவல்துறையினர் மீட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் கடற்கரை மணலில் புதைந்த நிலையில் கிடந்த 2 சாமி சிலைகளை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதில் ஒரு சிலையான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை மற்றும் மற்றொரு சிலையான சித்தர் சிலையையும் பத்திரமாக மீட்டனர். இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டினபாக்கம் கடற்கரை மணல் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னைவாசிகளுக்கு செம சூப்பர் அறிவிப்பு…. இனி காத்திருக்க தேவையில்லை…. ஆன்லைன் சேவைகள் அறிமுகம்….!!!!

தமிழகத்தில் தற்போது அரசு சார்ந்த அனைத்து வேலைகளும் ஆன்லைன் மையமாகி விட்டது. அதிலும் குறிப்பாக அரசு போட்டி தேர்வுகளுக்கு பதிவு செய்வதற்கு பிறப்பு , இறப்பை பதிவு செய்தல், சமூகக் கூடங்கள் முன்பதிவு செய்தல் போன்ற பணிகள்  ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் RTI என்ற சட்டத்தின் கீழ், ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை அவர்களின் வீட்டு வாசலில், வழங்குவதற்கான சூப்பர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆன்லைனில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. இனி ரூ.100 முதல் ரூ.5000 வரை அபராதம்…. மாநகராட்சி திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு வீடுகளில் குப்பைகளை பிரித்து பிரித்து தான் வாங்கப்படுகிறது. மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என குப்பைகள் தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்கள் தினம்தோறும் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். ஆனால் பல இடங்களில் இவை பிரிக்கப்படாமல் இருப்பதால் அவர்களின் பணி சிரமத்திற்கு உள்ளாகிறது. இந்த நிலையில் சென்னையில் குப்பைகளை தரம்பிரித்து தராவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. தனி இல்லங்களுக்கு 100 ரூபாய் வீதமும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஆயிரம் […]

Categories

Tech |