Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்றீங்க…? தீக்குளிக்க முயன்ற அரசு அதிகாரி… பெரும் பரபரப்பு…!!!!!

கடலூர் மஞ்சங்குப்பம் ராஜாம்பாள் நகரில் இந்து சமய அறநிலைக்கு சொந்தமான வேதவி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரேசன்  என்பவர் வீடு கட்டி வசித்து வருகின்றார். இதற்காக மாத வாடகை செலுத்தியுள்ளார். இந்த சூழலில் அவர் கடந்த சில வருடங்களாக வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் 5 லட்சத்திற்கும் மேல் பாக்கி நிலுவையில் இருக்கிறது. இதனை அடுத்து அந்த வீட்டை காலி செய்து சீல் வைக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பச்சை குத்த போனது ஒரு தப்பா”… வாலிபரிடம் மர்ம கும்பல் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

சென்னை மாம்பழத்தை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் வசித்து வருகிறார். இவர் கனடா நாட்டின் வேலை செய்து கொண்டிருக்கிறார். விடுமுறையில் சென்னைக்கு வந்தவர் தனது கையில் பச்சை குத்திக் கொள்ள விரும்பியுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் அவர் வடபழனையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இரண்டு பேர் இதைவிட சிறப்பாக பச்சை குத்தும் இடம் இருக்கிறது என கூறி விக்னேசை  வலுக்கட்டாயமாக காரில் ஏற்று கடத்தி சென்றனர். மேலும் செல்லும் வழியில் கோயம்பேடு […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்….. 3 நாட்கள் தொடர் விடுமுறை….. சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!

3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சனி ஞாயிறு மற்றும் திங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து வெளியூருக்கு கூடுதலாக 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இன்றும், நாளையும் கோயம்பேட்டில் இருந்து 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் விடுமுறை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி….. இந்த தினத்தில் ‘NO’ சரக்கு….. மதுபான கடைகளை மூட உத்தரவு….!!!

சென்னையில் வரும் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் போன்ற நாட்களில் மதுபான விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி சென்னையில் வரும் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி நம்பர் பிளேட்டை பயன்டுத்தி எஸ்கேப் ஆகும் வாகன ஓட்டிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி ஆகிய குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் போலியான வாகன எண்களை பயன்படுத்தி தப்பிவிடுகின்றனர். இதன் காரணமாக குற்றவாளிகளை பிடிப்பதில் காவல்துறையினருக்கு சிரமம் ஏற்படுகிறது. அதேபோன்று போலி நம்பர்பிளேட் பொருத்தி போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் சிலபேர் துணிச்சலாக வலம் வருகின்றனர். இதனால் வாகன எண்களின் உண்மைத் தன்மை பற்றி ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பரிவாஹன் இணையதளம் வாயிலாக வாஹன் செயலியை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் பதிவிறக்கம் செய்துள்ளனர். […]

Categories
Uncategorized

போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு…. 3 பேர் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை சூளை காளத்தியப்பா தெருவில் ராஜகுமாரி பக்கிரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவடி மாநகர போலீஸ் கமிஷன் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், அம்பத்தூர் ஒரடகம் பகுதியில் எனக்கு சொந்தமான 24 சென்ட் நிலத்தை 2001 ஆம் ஆண்டு அம்பத்தூரை சேர்ந்த அடைக்கலம் என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து தனது மகன்களான ஆனந்த்ராஜ்(57), ஜான் டேவிட் குமார்(48) ஆகியோருக்கு அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.எனவே ரூ.5 கோடி மதிப்புள்ள […]

Categories
மாநில செய்திகள்

இலவச மாநகரப் பேருந்து முழுவதும் பிங்க் வர்ணம்….. போக்குவரத்துறை அதிரடி….!!!

தமிழகத்தில் சாதாரண கட்டணம் கொண்ட அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது . அதில் சென்னையில் வெள்ளை நிற போர்டு கொண்ட பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பெண்கள் அவசரத்தில் டீலக்ஸ் மற்றும் சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். இந்த குழப்பத்தை தீர்க்க வேண்டும் என்பதற்காக இலவச பயணத்திற்கான பேருந்துகளை அடையாளம் காண பிங்க் நிற பேருந்துகள் கடந்த ஆறாம் தேதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவில், வீடு இடித்து அகற்றம்…. எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற தாய்-மகள்….. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை ஆவடியில் உள்ள கண்ணப்பாளையம் பகுதியில் கைத்தியம்மன் கோவில் அருகில் உள்ள தாமரை குளத்தின் கரையோரம் இவர் நாகபத்ரகாளியம்மன் புற்று கோவில் உள்ளது. இந்த கோவிலை ஜெயலக்ஷ்மி என்பவர் கட்டி அதன் முன்புறம் 8 அடி உயரமுள்ள காளி சிலையை வைத்து பராமரித்து வருகிறார். இவருக்கு மகள்கள் சசிகலா(28) மற்றும் சுகன்யா(27) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த கோவிலை ஜெயலட்சுமியின் பாட்டி, தாய் தற்போது அவர் என்று 3 வது தலைமுறையாக 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென போலீஸ் ஏட்டுவின் மகள் தூக்கிட்டு தற்கொலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. சோகம்….!!!!

சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கலைவாணி (46). இவர், புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கணவரை பிரிந்து அதே குடியிருப்பில் மகள் அக்சராவுடன் (15) வசித்து வருகிறார். இதில் அக்சரா முகப்பேரிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 பயின்று வந்தார். நேற்று முன்தினம் கலைவாணி பணி முடிந்து அம்பத்தூரிலுள்ள அவரது அண்ணன் குணசேகரன் வீட்டுக்கு சென்று விட்டு, இரவு தன் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடக்கம் செய்ய பணம் இல்லை…. குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய தந்தை….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

சென்னை திருவல்லிக்கேணி சாலையில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் கடந்த புதன்கிழமை கிடந்த சணல் பையில் இருந்த ஒரு பொருளை நாய்கள் கடித்து இழுத்துக் கொண்டு இருந்தன.அதனைப் பார்த்த பொதுமக்கள் உடனே அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் ஒரு ஆண் குழந்தையின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குளித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் சடதத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அந்த விசாரணையில் குழந்தை […]

Categories
அரசியல்

83ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று (ஆகஸ்ட்12) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2நாளில் முடிந்த வழக்கு…! வேகம் காட்டிய ஐகோர்ட்… தீர்ப்புக்காக ஓபிஎஸ், ஈபிஎஸ்.. பெரும் எதிர்பார்ப்பில் அரசியல் களம் ..!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்து வழக்குகள் இரண்டாவது நாளாக நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உடைய நீதி அரசர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி தன்னுடைய வாதங்களை தொடங்கினார்கள். சட்டப்படி பொதுக்குழு; அப்போது பொது குழுவானது […]

Categories
மாநில செய்திகள்

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…..! இந்த தினத்தில்….. “டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை”…..!!!!

சென்னையில் வரும் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வருகிற 15-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதை சார்ந்தவர்கள் பார்கள், ஹோட்டல்கள் சார்ந்த பார்கள் மற்றும் பல்வேறு உரிமங்கள் கொண்ட […]

Categories
மாநில செய்திகள்

சென்னை OMR-ல் பிரமாண்டமான போரூம் மால்…. திடீரென அதிகரித்த எதிர்பார்ப்பு…. எதற்காக தெரியுமா….?

சென்னையில் தியேட்டர்கள், மால்கள், பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கிறது. இங்கு புதிதாக மால்கள் மற்றும் ஹோட்டல்களும் தற்போது கட்டப்படுகிறது. அதன்படி ஒலிம்பியாவில் சென்னை நார்த் மால், ஓஎம்ஆர்-இல் போரூம் மால், ரேடிகள் சாலையில் சரவணா மால், லூலு மால், விமான நிலையத்தில் MLCP மால் போன்றவைகள் வரவிற்கிறது. இதில் OMR-ல் கட்டப்படும் போரூம் மால் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மால் 10 லட்சத்து 50 ஆயிரம் சதுர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. வசமான சிக்கிய வெளிநாட்டு பெண்….. ரூ.11 3/4 கோடி போதை பவுடர் பறிமுதல்….. அதிகாரிகள் அதிரடி……!!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் கடத்த பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாக முதன்மை கமிஷனர் உதய பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த தென்னாப்பிரிக்காவில் வெனிசூலா நாட்டை சேர்ந்த பிரான்சிஸ் ஜோசப் டோரஸ்(26) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி வைத்து விசாரணை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பழ வியாபாரியை காரில் கடத்தி சென்று அடி, உதை….. அண்ணன், தம்பி கைது….. போலீசார் அதிரடி….!!!!

வேலூர் மாவட்டத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் பழம் வியாபாரம் செய்து வருகிறார். அதனைப் போல அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலணியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தம்பி மணிகண்டன். இவர்களும் கோயம்பேடு மார்க்கெட்டில் பழம் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனையடுத்து தொழில் சம்பந்தமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகனிடம் இருந்து சக்திவேல் ரூ.2 லட்சத்தை கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணன்,தம்பி இருவரும் சேர்ந்து சக்திவேலிடம் கொடுத்த கடனை திரும்ப […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தெற்கு ரயில்வேயில் தபால் தலை கண்காட்சி….. இன்றுடன் முடிவு…. உடனே கிளம்புங்க….!!!

சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இரண்டு நாட்களான தபால்தலை கண்காட்சியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் பிஜி.மல்யா நேற்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த கண்காட்சியில் முத்திரைகள், முதல் நாள் அட்டைகள், சிறப்பு கவர்கள், அஞ்சல் பட அட்டைகள் மற்றும் இதர அஞ்சல் எழுத்து பொருட்கள் மூலம் கடந்த 75 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயின் வளர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 டன் பருப்பு மூட்டைகளை திருடிய வழக்கு…. 4 பேர் கைது….. போலீசார் அதிரடி…..!!!

சென்னை திருவொற்றியூரில் மத்திய அரசு நிறுவனத்திற்கு சொந்தமான கான்கார்டு கன்டெய்னர் யார்டு உள்ளது. இங்கு கடந்த மே மாதம் மராட்டியத்தில் இருந்து கப்பல் மூலம் சென்னை துறைமுகம் கொண்டுவரப்பட்ட உளுந்து பருப்பு மூட்டைகள் கண்டெய்னர் லாரி மூலம் கொண்டுவரப்பட்டது. அப்போது மர்ம நபர்கள் சிலர் கண்டெய்னர் யார்டில் வைக்கப்பட்டிருந்த அந்த கண்டெய்னர் பெட்டியின் சீலை உடைத்து அதில் இருந்த ரூ3 லட்சம் மதிப்புள்ள 2 டன் 3 கிலோ எடை கொண்ட உளுத்தம் பருப்பு மூட்டைகளை திருடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சியில் உயிரிழந்த மூதாட்டி….. என்னவா இருக்கும்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை தாம்பரத்தில் உள்ள மதுரபாக்கத்தில் 137 ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணிகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பையும் மீறி கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆக்ரமிப்பு வீடுகள் பெருமளவு இடிக்கப்பட்டது. இதனையடுத்து மீதமுள்ள வீடுகளை நேற்று முன்தினம் இடிக்க வருவாய்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 8 ஆம் தேதி இரவு மீதமுள்ள வீடுகளை காலி செய்யுமாறு ஆக்கிரமிப்புகார்களுக்கு வருவாய் துறையினர் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் 2 வது முறையாக மீண்டும் வருவாய்த்துறையினர் வீடுகளை இடிக்க வருவதாக அறிந்த […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் நீலகிரி பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING NEWS: தமிழகத்தில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. நீலகிரி,  கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 13 […]

Categories
மாநில செய்திகள்

75வது சுதந்திர தின விழ….. சென்னையில் 2வது நாள் ஒத்திகை….. போக்குவரத்து மாற்றம்….!!!

75 வது சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதால் அதனை முன்னிட்டு இரண்டாவது நாளாக இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 75வது சுதந்திர தின விழா வருகிற 15ஆம் தேதி சென்னை கோட்டையில் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு 6, 11 , 13 தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக காலை 6 மணி முதல் ஒத்திகை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது போதையில் சண்டை…. ரவுடி வெட்டி கொலை…. நண்பர்களின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பி.டி.மூர்த்தி நகர் வீரவாஞ்சிநாதன் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ் என்ற சுப்பிரமணி(24). ரவுடியான இவர் மீது காவல் நிலையத்தில் கொலைமுயற்சி உட்பட 10-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் ரமேஷ், தன் நண்பர்களான செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரை சேர்ந்த வீரா என்ற வீரராகவன்(25), விஜய் என்ற தம் விஜய்(25), ஜோதி நகர் 8வது தெருவை சேர்ந்த வெங்கட் என்ற வெங்கடேசன்(27), செங்குன்றத்தை அடுத்த காந்திநகரை சேர்ந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிணமாக மீட்கப்பட்ட பெண் தூய்மை பணியாளர்…. விசாரணையில் சிக்கிய கணவர்…. பரபரப்பு வாக்குமூலம்….!!!!

சென்னை திருவொற்றியூர் பூங்காவன புரம் 1-வது தெருவில் மணிமாறன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைதிலி(34) என்ற மனைவி இருந்தார். இவர் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையில் தன் மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் மணிமாறன் புகார் செய்தார். இந்நிலையில் மணலி சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகில் மைதிலி உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓ.. இது அந்த துப்பாக்கியா?… ஒரு நிமிஷத்தில் அதிர்ந்துபோன துப்புரவு பணியாளர்கள்…. பரபரப்பு….!!!!

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நேற்று அதிகாலை மெட்ரோ ரயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு இருந்த குப்பைதொட்டியில் கைதுப்பாக்கி ஒன்று இருப்பதை பார்த்து துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குப்பை தொட்டியில் இருந்த கைதுப்பாக்கியை பறிமுதல் செய்து புதுப்பேட்டையிலுள்ள ஆயுத கிடங்கிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவரைப் பார்த்தால் சந்தேகமா இருக்கு….? சோதனையில் சிக்கிய 52 லட்சம்…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நடைமேடை 4 ல் வந்தடைந்த சிறுகார் எக்ஸ்பிரஸில்  ஏறி  சோதனை மேற்கொண்டனர். அதில் சந்தேகக்கும்படியான நபர் ஒருவர் வைத்திருந்த பைகளை ஆய்வு மேற்கொண்டதில் அவற்றில் 51 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரொக்க பணம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…..! இனி நெட்ஒர்க் ஸ்பீடா இருக்கப்போகுது….. சென்னை உள்பட 13 நகரங்களில் 5ஜி சேவை….!!!!

சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் முதற்கட்ட 5ஜி சேவை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஜியோ, ஏர்டெல், அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றனர். ஏலம் எடுத்த தொலைத்தொடர்பு நெட்வொர்க்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒப்புதல் மற்றும் ஒதுக்கீடு பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த மாதம் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

CCTVக்கு முத்தம் கொடுத்த திருடர்கள்….. வீடியோவை பார்த்து ஷாக்கான போலீசார்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும் விதவிதமான முறையில் திருடும் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் சென்னை உள்ளகரம் அடுத்துள்ள பகுதியில் இருக்கும் வீட்டில் திருடர்கள் நள்ளிரவில் கொள்ளை அடிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை பார்த்து சற்றும் பயமில்லாமல் அதற்கு மாறாக போதையில் முத்த மழை பொழிந்துள்ளனர். திருடர்கள் சிசிடிவி கேமராவுடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இங்கு பிளாஸ்டிக் பொருட்களை யூஸ் பண்ண கடைகளுக்கு…. ரூ.15 ஆயிரம் அபராதம்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக மாற்ற கடந்த 5- ஆம் தேதி முதல் தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் என்று மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது, இங்கு உள்ள கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லாதவாறு பராமரிக்கும் விதமாக சுகாதார அலுவலர்களின் தலைமையில் காலை மற்றும் மாலை ஆய்வு மேற்கொள்ளப்படும். அந்த ஆய்வின்போது பிளாஸ்டிக் பொருட்களானது பறிமுதல்செய்யப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்…. கைவரிசை காட்டிய வாலிபர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

சென்னை தியாகராய நகர் ராஜாச்சார் தெருவில் வசித்து வருபவர் காயத்ரி (45). இவர் நேற்று முன்தினம் மாலை 6.20 மணி அளவில் தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலை வழியாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் காயத்ரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்ப முயன்றனர். இதனால் காயத்ரி கூச்சலிட்டார். இதையடுத்து பொதுமக்கள் அந்த 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் 2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அன்னதானம் வழங்குவதில் சண்டை…. ஒருவரை ஒருவர் தாக்கியதால் விபரீதம்…. பரபரப்பு….!!!!!

சென்னை பல்லவன் சாலை சிவசக்தி மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடந்தது. அப்போது நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அங்குவந்த ஆறுமுகம் (27) என்பவர் வழக்கமாக இரவு 12 மணிக்குதான் அன்னதானம் வழங்கப்படும். இந்த வருடம் ஏன் இவ்வளவு சீக்கிரம் வழங்குகிறீர்கள்..? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு ஆதரவாக அஜித், ராஜ்குமார், பிரகாஷ் ஆகிய 3 பேர் குரல் கொடுத்தனர். இவர்கள் அனைவரையும் குமார்(36) என்பவர் […]

Categories
அரசியல்

80ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று (ஆகஸ்ட் 9) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 9) போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைவு விழா நேரு ஒரு விளையாட்டு அரங்கில் இன்று  நடைபெற உள்ளது. அதனால் சென்னையில் இன்று  போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே தினமும் மூன்று மணி முதல் இரவு 9 மணி வரையில் ராஜா முத்தையா சாலை, ஈவேரா பெரியார் சாலை, சென்ட்ரல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக மதியம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீ…. அலறியடித்து ஓடி வந்த குடும்பத்தினர்…. சென்னையில் பரபரப்பு…!!

அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எறிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் 2-வது மெயின் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது தளத்தில் வசிக்கும் ஈஷா என்பவரது வீட்டில் உள்ள ஸ்விட்ச் போர்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ வீடு முழுவதும் வேகமாக பரவியது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தோழியின் வீட்டிற்கு அழைத்து சென்ற தாய்…. நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான சிறுமி…. பரபரப்பு சம்பவம்…!!

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பானு நகர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தனன்யா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடன் கனுஷியா என்ற சிறுமியும் படித்து வந்துள்ளார். அப்போது கனினுஷியாவின் தாயாருடன் கண்மணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கனுஷ்யாவின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மேடவாக்கம் சிவகாமி நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜேஷ் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மது போதையில் வீட்டிற்கு வந்த ராஜேஷை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சவாரி ஏற்றுவது தொடர்பாக தகராறு…. ஆட்டோ ஓட்டுநரின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2010-ஆம் ஆண்டு செல்வகுமாருக்கும், மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான கருணாநிதி என்பவருக்கும் சவாரி ஏற்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கருணாநிதி கத்தியால் செல்வகுமாரை குத்திக்கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கருணாநிதியை கைது செய்தனர். இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துவரப்பட்ட 51 லட்ச பணம்”….. வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு…!!!!!!!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நடைமேடை 4 ல் வந்தடைந்த சிறுகார் எக்ஸ்பிரஸில்  ஏறி  சோதனை மேற்கொண்டனர். அதில் சந்தேகக்கும்படியான நபர் ஒருவர் வைத்திருந்த பைகளை ஆய்வு மேற்கொண்டதில் அவற்றில் 51 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரொக்க பணம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் […]

Categories
அரசியல்

79ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. மக்கள் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த மதுரப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 137 வீடுகளில் 600க்கும் அதிகமான மக்கள் பல ஆண்டுக்களாக வசித்து வருகின்றனர். இப்பகுதி அரசுக்கு சொந்தமான நிலம் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி‌ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வீடுகளை காலிசெய்யும்படி வருவாய்த்துறை சார்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. எனினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் தாம்பரம் தாசில்தார் கவிதாவுக்கு ரூபாய்.25 ஆயிரம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம், வரும் 11-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!…. தமிழகத்தில் நீடிக்கும் மோசடி…. ரூ.12 லட்சத்தை இழந்த பெண்…. பரபரப்பு….!!!!

சென்னை வில்லிவாக்கம், பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் தில்லைவாணி (56). இவரது கணவர் சிரார்த்தனன்(67) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இந்த தம்பதியினரின் மகன் சூரியபிரதாபன் (36). இதில் சூரியபிரதாபன் என்ஜினீயரிங் முதுகலை பட்டதாரி ஆவார். இவருடன் பிளஸ் 2 வரை பயின்ற அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன்(36) ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். சென்ற ஏப்ரல் மாதம் தில்லைவாணியிடம் மணிமாறன் கூறியதாவது “மத்திய மந்திரி ஒருவரின் சிபாரிசில் தான் நான் ரயில்வேயில் பணிக்கு சேர்ந்தேன். அதேபோன்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை (ஆகஸ்ட் 9) போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையும் அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைவு விழா நேரு ஒரு விளையாட்டு அரங்கில் நாளை நடைபெற உள்ளது. அதனால் சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே தினமும் மூன்று மணி முதல் இரவு 9 மணி வரையில் ராஜா முத்தையா சாலை, ஈவேரா பெரியார் சாலை, சென்ட்ரல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நொறுங்கிய பேருந்து….. கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் கோர விபத்து…. ஒருவர் பலி….!!!!

சென்னை கிண்டி அருகே இருக்கும் இரும்பு வழிகாட்டி பலகை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி அருகே கத்திப்பாரா பாலம் சந்திப்பில் உள்ள இரும்பு வழிகாட்டி பலகை திடீரென சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீது விழுந்தது. இரும்பு பலகை விழுந்ததில் வாகன ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து கழகங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டம்…. ராம்தாஸ் முக்கிய கோரிக்கை….!!!!!!!!!

போக்குவரத்து கழகங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மேலும் அரசு போக்குவரத்து கழகங்களின் கட்டமைப்பை மேம்படுத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கப்படுவது அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவன ராம் தாஸ் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை மாநகர பேருந்துகளை படிப்படியாக தனியார் மயமாக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாகவும் அதற்காக உலக வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும் வெளியாகி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்தப் பகுதியில் மெக்கானிக் கடை உள்ளதா….? சுதாரிப்பதற்குள் வாலிபரின் தங்க சங்கிலி பறிப்பு… தீவிர விசாரணை போலீசார்….!!!!!!!!!

சென்னை அடுத்த  குரோம்பேட்டை பாத்திமா நகர் கிருஷ்ணா தெருவை சேர்ந்த அவினாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அடையாற்றில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லிப்ட் ஆபரேட்டராக வேலை செய்து கொண்டிருக்கிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் பல்லாவரம் துறைப்பாக்கம் ரேடியல் சாலையில் வந்து கொண்டிருந்தார். நன்மங்கலம் குரோம்பேட்டை இணைப்பு சாலை வழியாக வீட்டிற்கு திரும்பிய போது இரண்டு பேர் அவரை வழிமறித்து எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. இந்த பகுதியில் மெக்கானிக்கடை இருக்கிறதா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது”… மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை…!!!!!!!!

சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் நேற்று முதல் சென்னை மாநகராட்சியின் சார்பில் மெரினா பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகள் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை இரு வேலைகளும் ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் கடை உரிமையாளர்களுக்கு அதிகபட்ச அபாரதமும்  விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மெரினா கடற்கரையில் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட கள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2000 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்…. இன்னும் சற்று நேரத்தில்…. சென்னை மக்களே உடனே கிளம்புங்க….!!!!!!!

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று  2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்  நடைபெற இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலும் சென்னையில் இதுவரை 32 கொரோனா  தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த முகாம்கள் மூலமாக இதுவரை 40 லட்சத்து 34 ஆயிரத்து 207 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இன்று  நடைபெற இருக்கின்ற 33வது தடுப்பூசி முகாமிற்காக ஒரு வாரத்துக்கு பத்து முகாம்கள் வீதம் 200 வார்டுகளில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் கொடூர விபத்து…. உயிர் பலி….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை கத்திப்பாரா ஆலந்தூர் மெட்ரோ அருகே சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வழிகாட்டி பலகை விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த பெரிய பெயர் பலகை விழுந்ததில் மாநகர பேருந்து, வேன், ஆட்டோ மற்றும் பைக் உள்ளிட்ட அருகே இருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன.இந்த விபத்தினால் ஆலந்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல…. 2இல்ல… 12மாவட்டதுக்கு அலெர்ட்… வானிலை ஆய்வு மையம் தகவல் ..!!

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்,கோவை, ஈரோடு, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் சில பகுதிகளில் மட்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்சார ரயிலில் சோதனை… 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து சூலூர்பேட்டை போகும் மின்சார ரயிலில் சென்டிரல் ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி. முத்துக் குமார், கொருக்குப்பேட்டை ரயில்வே இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் பயணிகள் அமரும் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து விசாரணையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளிலிருந்து அரிசியை வாங்கி மூட்டை மூட்டையாக கொருக்குப் பேட்டை, தண்டையார் பேட்டை, திருவொற்றியூர், மீஞ்சூர் போன்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் மூலம் உங்கள் பணத்தை அனுப்புறேன்”…. மர்ம நபரின் திருட்டு செயல்…. அதிர்ச்சியடைந்த வாலிபர்….!!!!

சென்னை அண்ணா நகரிலுள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்தும் எந்திரத்தில் பணம் போடுவதற்காக பாடியை சேர்ந்த தனுஷ் (21) என்பவர் வந்தார். அப்போது அவருக்கு எந்திரத்தில் எவ்வாறு பணம் செலுத்துவது என்பது தெரியாமல் தவித்தார். இதனால் அங்குவந்த மர்மநபர் எந்திரத்தில் பணம் செலுத்த உதவி செய்வதாக தனுசிடம் கூறினார். இதையடுத்து பணம் செலுத்துவது போன்று நடித்த மர்ம நபர், எந்திரத்தில் பணம் செலுத்த முடியாததால் தன் செல்போனிலிருந்து ஆன்லைன் வாயிலாக உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை […]

Categories

Tech |